புதிய எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் (Pierre Poilievre) தலைமையிலான எதிர்க்கட்சியினர் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
அண்மையில் லிபரல் கட்சி அரசாங்கம் அல்பர்ட்டா மாகாண அரசுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு, லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையில் ஆதரவளிக்கிறார்களா என்பதை வெளிப்படையாக நிரூபிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாம் கொண்டுவரவுள்ள இந்தத் தீர்மானம் ஆனது, லிபரல் கட்சியினரை “உறுதியான முடிவைச் சொல்ல வேண்டும் அல்லது மௌனமாக இருக்க வேண்டும்” என்ற நிலைக்குத் தள்ளும் என்று பொய்லியேவ் தெரிவித்துள்ளார்.
அனைத்து லிபரல் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது பணிகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என்றும், மாறாக லிபரல் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தால், குழாய் இணைப்புத் திட்டத்தில் அரசுக்கு உண்மையான ஈடுபாடு இல்லை என்பது நிரூபணமாகும் என்றும் பியர் பொய்லியேவ் கூறியுள்ளார்.
