மொன்றியல் மாநகர வீதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ” வீதிப்பள்ளங்களை அவசரகால முறையில் சீரமைத்தலுக்கான” ஒப்பந்தங்கள் தொடர்பாக, மொன்றியல் மாநகர ஆய்வாளர் (Inspector General) உத்தியோகபூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
மொன்றியல் மாநகரத்தின் மோசமான வீதிகளைச் சீர்செய்ய வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தங்களில் முறையான விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக, மொன்றியல் வீதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதனைச் சீர்செய்வதற்காக பகிரங்க விலைமனு கோரப்படாமல் அவசர நிலையைச் சுட்டிகாட்டி, கடந்த பெப்ரவரி மாதம் 10 ஒப்பந்தங்கள், மூன்று தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
சுமார் 5 இலட்சம் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தச் செயன்முறைகளில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
