மொண்ட்ரியல் மற்றும் ஒட்டாவா முதலான நகரங்களை மையமாகக் கொண்டு, ஒரு புதிய ‘ட்ரோன் புத்தாக்க மையம்’ (Drone Innovation Hub) உருவாக்கப்படவுள்ளது.
இராணுவத் தேவைகள் மட்டுமின்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கான ட்ரோன் தொழில்நுட்பங்களையும், எதிரி நாட்டு ட்ரோன்களை முறியடிக்கும் பாதுகாப்பு அமைப்புகளையும் இந்த மையம் ஆய்வு செய்யும்.
“நமது நாட்டின் பாதுகாப்பு என்பது உள்நாட்டிலேயே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதைச் சார்ந்துள்ளது” எனத் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையை நவீனப்படுத்தும் நோக்கில், சுமார் 900 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய முதலீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய ஆராய்ச்சி கவுன்சில் (NRC) ஊடாக செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், நாட்டின் தற்காப்புத் திறனை உள்நாட்டிலேயே வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, கனடாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘பொம்பார்டியர் குளோபல் 6500’ (Bombardier Global 6500) ரக ஜெட் விமானம் ஒன்று வாங்கப்படவுள்ளது.
சுமார் 500 மில்லியன் டாலர் செலவில் வாங்கப்படும் இந்த விமானம், சாதாரண பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படாது.
மாறாக, அதிநவீன ரேடார் கருவிகள், உளவுத் தகவல்கள் சேகரிக்கும் அமைப்புகள் மற்றும் மின்னணு போர் முறைகளைச் சோதித்துப் பார்க்கும் ஒரு “பறக்கும் ஆராய்ச்சி கூடமாக” இது மாற்றப்படும்.
