எயார் கனடா நிறுவனமானது, கியூபெக் நகரத்தில் தனது விமானத் தரையிறங்கல் செயற்பாடுகளை முழுமையாக மின்சார மயம் ஆக்குகின்றது.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருட் பயன்பாட்டை முற்றாக நிறுத்தி, விமானத் தரையிறங்கல் செயற்பாடுகளை சுற்றுச்சூழலுக்கு நட்புடைய வகையில் மின்சார மயம் ஆக்குவதை எயார் கனடா நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
இவ்வாண்டு நிறைவடைய முன்னர். இந்த இலக்கு எட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2030 ஆம் ஆண்டுக்குள், தனது விமான செயல்பாடுகளில் 20% கார்பன் உமிழ்வையும் தரைசார் செயல்பாடுகளில் 30% கார்பன் உமிழ்வையும் குறைப்பதற்கான இடைக்கால குறிக்கோள்களையும் எயார் கனடா முன்வைத்துள்ளது.
கியூபெக் நகரில் உள்ள புதுப்பிக்கத்தக்க நீர் மின்சாரம் இத்திட்டத்திற்குத் தகுந்த துணையாக உள்ளது என எயார் கனடா நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியான மைக்கேல் ருசோ தெரிவித்துள்ளார்.
