Saskatchewan மாகாணத்தில் நீடித்துவந்த ஆசிரியர்களின் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Saskatchewan ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் Saskatchewan மாகாண அரசு ஆகியவற்றுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக Saskatchewan ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் சமந்தா பெக்காட் தெரிவித்தார்.
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் ‘சஸ்காட்சுவான் மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலதிகமாக, ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள்’ என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமந்தா பெக்காட் தெரிவித்தார்.
இந்த கூட்டு ஒப்பந்தம் குறித்து தாம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, Saskatchewan மாகாண கல்வி அமைச்சர் Everett Hindley கூறியுள்ளார்.
இப்பிரச்சினையில் தற்போது அடையப்பெற்ற இந்த முடிவை எட்டுவதற்கு பல தரப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கான உறுதிப்பாட்டை வழங்கும் இந்த புதிய கூட்டு ஒப்பந்தம் மகிழவளிப்பதாகவும் Saskatchewan மாகாண கல்வி அமைச்சர் Everett Hindley தெரிவித்துள்ளார்.