ஒட்டாவா பொலிஸ் சேவைகள் திணைக்களமானது, நவம்பர் மாதம் முதல் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடல் அணியும் கமெராக்களை (Body-Worn Cameras) வழங்கத் தொடங்கும் என அறிவித்துள்ளது.
பொலிஸ் சேவைகளில் அதிக வெளிப்படைத்தன்மை (transparency) மற்றும் பொறுப்புக்கூறல் (accountability) ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆரம்பகட்ட முன்னோடித் திட்டத்தின் கீழ், 30 Axon Body 4 கமெராக்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் உயிரிழந்த சோமாலிய-கனடியரான அப்டிரஹ்மான் அப்தியின் (Abdirahman Abdi) மரணம் தொடர்பான விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே, இந்த உடல் அணியும் கமெராக்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றன.
ஒட்டாவா பொலிஸ் சேவைகள் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து, இதற்கான நிதி ஒதுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
