கனடாவின் மிகப்பெரிய பாடசாலைச் சபையான டொராண்டோ மாவட்ட பாடசாலைச் சபை உட்பட வட அமெரிக்காவில் உள்ள பல பாடசாலைச் சபைகள், சைபர் குற்றவாளிகளிடமிருந்து மிரட்டல் கோரிக்கைகளைப் பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற பாரிய சைபர் பாதுகாப்பு மீறலின்போது பெருமளவு தகவல்கள் திருடப்பட்டன.
திருடப்பட்ட அந்த தரவுகளைச் சுட்டிக்காட்டியே இந்த மிரட்டல் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நிறுவனமான பவர்ஸ்கூல், திருடப்பட்ட அந்த தகவல்கள் மீதான குற்றவாளிகளின் ஆதிக்கத்தை நீக்குவதற்காக அவர்களுக்கு பணம் செலுத்தியது.
எனினும், பணம் கொடுத்த பின்னரும் கூட, சைபர் குற்றவாளிகளின் மிரட்டல் கோரிக்கைகள் தொடர்கின்றன.
அல்பேட்டா, ஒன்டாரியோ, மானிடோபா, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார், நோவா ஸ்கோடியா, வடமேற்கு பிரதேசங்கள், இளவரசர் எட்வர்ட் தீவு மற்றும் சஸ்காட்செவன் ஆகிய கனேடிய மாகாணங்களில் உள்ள பாடசாலைச் சபைகள் பவர்ஸ்கூல் நிறுவனத்தின் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.