உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மார்க் கார்னி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதில், 18 பேர் உயிரிழந்தனர்.
இவர்களுள் நான்கு குழந்தைகள் அடங்குவர். மேலும், குறித்த தாக்குதலில் 48 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனின் விமானப்படை தகவலின்படி, ரஷ்யா 598 ட்ரோன்கள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவியுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி தமது கண்டனப் பதிவில் “ரஷ்யா வேண்டுமென்றே அப்பாவிப் பொதுமக்களையும் குழந்தைகளையும் குறிவைத்துத் தாக்கி கொன்றதாக” தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பேச்சுவார்த்தைக்குப் பதிலாக, கொலையைத் தேர்ந்தெடுப்பதாக பிரதமர் மார்க் கார்னி குற்றம் சாட்டியுள்ளார்.
