இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள புலம்பெயர் சமூகம் சமாதானத்தை விரும்புகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்தியா தாக்குதலை மேற்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புள்ள பிரிட்டிஷ் கொலம்பிய மக்கள் அதுகுறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அவர்கள் சமாதானத்திற்காக அழைப்பையும் விடுக்கின்றனர்.
ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்று அன்று இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் நடந்த தாக்குதலில் துப்பாக்கி ஏந்தியவர்களால் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர்.
அந்த சம்பவத்திலிருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய இந்து சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்க சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும் என்று வான்கூவரில் உள்ள பாகிஸ்தான்-கனடா சங்கத்தின் இயக்குநரும், அல் ஜாமியா மஸ்ஜித் மசூதியின் இயக்குநருமான ஹாரூன் கான் தெரிவித்துள்ளார்.
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தெற்காசிய சமூக உறுப்பினர்கள் இந்த மோதல் குறித்து கவலை அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.