New Brunswick மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோன் பிராந்தியத்தின் ஒரு பகுதிக்கு விடுக்கப்பட்ட “பாதுகாப்பு” எச்சரிக்கை, மூன்று மணித்தியாலங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது.
நேற்று மாலை 5:12 மணிக்கு மாபீ வீதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
மாலை 5:35 மணியளவில், வேறொரு காரணத்திற்காக உள்ளூர் மருத்துவமனையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் வந்த ஒருவரை சந்தித்தார்.
ராக்வுட் பூங்காவில் மரங்கள் நிறைந்த பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் தாம் சுடப்பட்டதாக காயமடைந்த நபர் காவல்துறை அதிகாரியிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ராக்வுட் பூங்காவுக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தனர்.
இந்த பாதுகாப்பு எச்சரிக்கை மூன்று மணித்தியாலங்களின் பின்னர் மீளப்பெறப்பட்டது.
ராக்வுட் பூங்காவில் சுடப்பட்ட நபருக்கும், மாபீ சாலையில் முதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த புகாருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.