Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மோடி இன்று இலங்கைக்கு விஜயம் !

ஏப்ரல் 4, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் ஞாயிறு வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.

இவ்விஜயத்தின்போது, பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

இலங்கையில் தங்கியிருக்கும்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரத்துக்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடக்கி வைப்பார்.

இவ்விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் இன்று கைச்சாத்திடப்படலாமெனத் தெரிகிறது.சம்பூரில் மின் திட்டமொன்றை ஆரம்பிக்க திருகோணமலைக்கு பிரதமர் செல்லவிருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களையொட்டி அவர் அங்கு செல்லமாட்டாரெனச் சொல்லப்பட்டது.

கொழும்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை மோடி நாளை சந்திக்கவுள்ளார்.

முன்னதாக இலங்கை புறப்பட முன்னர் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவொன்றை இட்டார்.அதில் ஏப்ரல் நான்கு முதல் ஆறு வரையான திகதிகளில் இலங்கைக்கான இருநாள் விஜயமொன்றை மேற்கொள்கிறேன். கடந்த டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்க மேற்கொண்டிருந்த மிகவும் வெற்றிகரமான விஜயத்தைத் தொடர்ந்து இவ்விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது.

‘பகிரப்பட்ட எதிர்காலம் ஒன்றுக்கான பங்குடைமைகளை வலுவாக்கல்’ என்ற கூட்டு தொலைநோக்கு குறித்த முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு இதன்போது சந்தர்ப்பம் கிடைக்கும். அதேவேளை, நமது பகிரப்பட்ட இலக்குகளை உணர்ந்து கொள்வதற்கு மேலதிக வழிகாட்டல்களையும் இவ்விஜயம் வழங்குகின்றது.

கடந்த கால அடித்தளங்ளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இவ்விஜயங்கள், நமது மக்களின் நலன்கள் மற்றும் பரந்த பிராந்தியத்தின் நலன்களுக்காக நமது நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்குமென நான் நம்புகின்றேன்.

மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்
செயற்படுத்தப்படவுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மோடி தரையிறங்கியது முதல் 06 ஆம் திகதி அவர் செல்லும் வரை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் எனப் பலரும் வருகை தரவுள்ளனர்

மேல் மாகாண மூத்த டி.ஐ.ஜி. சஞ்சீவ தர்மரத்ன, மோடியின் கொழும்பு பயணத்துக்கான பாதுகாப்புகளைக் கண்காணிக்க உள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் இந்தியப் பாதுகாப்புக் குழுவும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு ….
அடுத்த செய்தி Saskatchewan மாகாணத்தில் நீடித்த ஆசிரியர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்தது….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

‘வெலேசுதா’ உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மைதானத்தை தனது காணி என உரிமை கோரி சென்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தடுத்து நிறுத்திய மக்கள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-24 ஏப்ரல் 2025

ஏப்ரல் 24, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தமிழரசு கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

மார்ச் 19, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?