ஹாமில்டன், பிராண்ட்போர்ட் மற்றும் தென்மேற்கு ஒன்டாரியோவின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று உறைபனி மழை (Freezing Rain) எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ளது.
இந்தக் கடுமையான வானிலை மாற்றத்தினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மரக்கிளைகள் மற்றும் மின்சாரக் கம்பிகளில் 5 முதல் 10 மில்லி மீட்டர் வரை பனிக்கட்டிகள் படியக்கூடும் எனவும் இதனால் மின்சாரம் துண்டிக்கப்படவும், மரங்கள் முறிந்து விழவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறைபனி மழையுடன் சேர்ந்து அடர்த்தியான மூடுபனியும் காணப்படுவதால், வாகனங்களை ஓட்டுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
