களுத்துறை , கட்டுகுருந்த கடற்கரைக்கு இன்று மாலை நீராட சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன நபருக்கு 55 வயது என தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்த நிலையிலேயே இவ்விபத்து சம்பவித்ததுள்ளதுடன், காணாமல் போனவரை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
