கியூபெக் மாகாணத்தின் புதிய குடியேற்ற அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜான்-பிரான்சுவா ரோபெர்ஜ் (Jean-François Roberge), இந்த ஆண்டு 29,000 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கான புதிய 'திறன்மிகு பணியாளர் தேர்வுத் திட்டம் (PSTQ) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுவரை நடைமுறையிலிருந்த கியூபெக் அனுபவத் திட்டம் (PEQ) கடந்தநவம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது.
அதற்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தில்,
விண்ணப்பிக்கும் வரிசைக்கு முன்னுரிமை அளிக்கப்படாது.
மாறாக, இந்த புதிய தேர்வுத்திட்டத்தில், தகுதியின் அடிப்படையிலேயே(Selection-based) விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஏற்கனவே கியூபெக் மாகாணக் கல்வி நிறுவனங்களில் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்கள், சுகாதாரம் (Health), கல்வி (Education), கட்டுமானம் (Construction) மற்றும் பொறியியல் (Engineering) துறைகளில் பணியாற்றுபவர்கள், பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்தவர்கள் முதலானோருக்கே, இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் அனுப்பப்பட்ட முதல் கட்ட 2,500 அழைப்புகளில், 64
சதவீதத்திற்கும் அதிகமானோர் மொன்ட்ரியல் மற்றும் லாவல் நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கியூபெக் மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கியூபெக் அரசின் இந்த அதிரடி முடிவிற்குப் பலத்த எதிர்ப்புகளும்
கிளம்பியுள்ளன.
