தம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 12 வயது சிறுமி மாயா கெபாலாவின் (Maya Gebala) குடும்பத்தினர், சாட்-ஜிபிடி (ChatGPT) தயாரிப்பு நிறுவனமான ‘OpenAI’ மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கொலையாளி இந்த மென்பொருளைப் பயன்படுத்தித் தாக்குதலுக்குத் திட்டமிட்டது தெரிந்தும், அந்தத் தகவலை காவல்துறைக்குத் தெரிவிக்கத் தவறியதே இந்த வழக்கிற்குக் காரணமாகும்.
தாக்குதலை நடத்திய ஜெஸ்ஸி வான் ரூட்ஸெலார் (Jesse Van Rootselaar), பல மாதங்களாக ‘ChatGPT’ உடன் இது குறித்து உரையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே அவரது கணக்கு “வன்முறையைத் தூண்டுவதாக” கூறி ‘OpenAI’ நிறுவனத்தால் முடக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தகவல் பற்றி காவல்துறைக்கு ‘OpenAI’ நிறுவனம் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகத்தில் தனிமைப்பட்டிருந்த கொலையாளிக்கு, இந்த சாட்-ஜிபிடி (ChatGPT) மென்பொருள் ஒரு “ஆலோசகர் மற்றும் நண்பன்” போன்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
