குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மசோதா C-3’ (Bill C-3) அமுலுக்கு வந்ததையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கானோர் இப்போது கனடா குடியுரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாக மாறியுள்ளனர்.
“முதல் தலைமுறை கட்டுப்பாடு” (First-generation limit) நீக்கப்பட்டதன் மூலம், வெளிநாட்டில் பிறந்த கனேடியர்களும் தங்களது பிள்ளைகளுக்குக் குடியுரிமையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அமுலில் இருந்த சட்டப்படி, ஒரு கனேடியப் பெற்றோர் கனடாவுக்கு வெளியே பிறந்திருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் கனேடியக் குடியுரிமை தானாகக் கிடைக்காது.
இந்தப் புதிய சட்டத்தின் கீழ், 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன், வெளிநாடுகளில் பிறந்தவர்கள், விண்ணப்பிப்பதன் மூலம் தங்களது கனேடிய குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் நிலவும் அரசியல் மாற்றங்களால், அங்கிருக்கும் பல அமெரிக்க-கனேடிய வம்சாவளியினர், இப்போது கனடா குடியுரிமையைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
