நாடாளுமன்றத்தில் வெறுமையாக உள்ள மூன்று நாடாளுமன்ற ஆசனங்களுக்குரிய தேர்தல் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திகதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி அன்று ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தற்போது கனடா நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சிக்கு 169 இடங்கள் உள்ளன.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிலையை அடைவதற்கு மத்திய அரசுக்கு மொத்தமாக, 172 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இந்த மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, பிரதமர்ட் மார்க் கார்னி அரசு பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும்.
கியூபெக் மாகாணத்தில் டெரெபோன் (Terrebonne) என்ற தேர்தல் தொகுதியில், இந்த இடைத்தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
