மொண்ட்ரியல் நகரின் வில்லே-மேரி (Ville-Marie) பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
அந்த துப்பாக்கிச்சூட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். 2026-ம் ஆண்டில் மொண்ட்ரியலில் பதிவாகியுள்ள மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில், செயிண்ட்-ஆண்ட்ரே (Saint-André) வீதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், கிரிஸ்டோபர் டென்ஸ்கி டேமியர் (Christopher Densky Damier) என்ற 18 வயது இளைஞர் மேல் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய மொண்ட்ரியல்
காவல்துறையினர், மசம்பா பால் (Massamba Fall) என்ற 19 வயது இளைஞரைக் கைது செய்தனர். இவர் மீது திட்டமிடப்படாத கொலைச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
