Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தளர்வு

மார்ச் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் பல தசாப்தங்களாக வார இறுதி நாட்களில் மாலை 5 மணிக்கு கடைகளை மூட வேண்டும் என்றிருந்த கட்டாய விதிமுறை முடிவுக்கு வருகிறது.எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் கடைகள் இரவு 9 மணி வரை இயங்குவதற்கு அனுமதி அளிக்கும் ஓராண்டு கால முன்னோடித் திட்டத்தை (Pilot Project) கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது. துணிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் கடைகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் முதலானவை, கியூபெக் மாகாணத்தில் இனி வாரத்தின் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.

மருந்தகங்கள் (Pharmacies) மற்றும் மளிகைக் கடைகள் ஏற்கனவே கூடுதல் நேரம் இயங்க அனுமதி பெற்றுள்ளதால், இந்த புதிய மாற்றத்தினால் அவற்றிற்கு பாதிப்பில்லை என்று தெரியவருகின்றது.

அமேசான், ஷீன் (Shein) மற்றும் டெமு (Temu) போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்குவதால், அவற்றுடன் போட்டியிடுவதற்காக, கியூபெக்கின் சாதாரண வணிகங்களுக்கும் கூடுதல் கால அவகாசம் தேவை என்று மாகாண அரசு கருதுகிறது.

அரசின் இந்த முடிவை பெரிய வணிக வளாகங்கள் வரவேற்றாலும், சிறிய கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சில கவலைகளை முன்வைக்கின்றனர். ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறை நிலவும் சூழலில், கூடுதல் நேரம்கடைகளை இயக்குவது ஊழியர்களுக்குப் பணிச்சுமையை அதிகப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

கியூபெக் மாகாணத்தில் இரவு வரை கடையைத் திறந்து வைப்பதால் மின்சாரம் மற்றும் சம்பளச் செலவு அதிகரிக்குமே தவிர, லாபம் பெருகுமா என்பது சந்தேகமே எனச் சில வணிகர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இந்த முன்னோடித் திட்டம் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் மக்களின் வரவேற்பு மற்றும் வணிக ரீதியான லாப நஷ்டங்களைக் கணக்கிட்ட பிறகு, இந்தச் சட்டத்தை நிரந்தரமாக்குவது குறித்து, கியூபெக் அரசு இறுதி முடிவு எடுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டாம் – கடற்றொழில் அமைச்சர்
அடுத்த செய்தி மொண்ட்ரியல் துப்பாக்கிச் சூடு விவகாரம் – 19 வயது சந்தேகநபர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் கடும் நிதி நெருக்கடி

மே 22, 2026
கியூபெக்

கியூபெக்கில் ஆங்கிலம் பேசும் மக்களுடன் இணக்கமாக விரும்பும் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட்

ஜூன் 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரதான பாலத்தில் போக்குவரத்து பிரச்சினை

நவம்பர் 29, 2025
கியூபெக்

கியூபெக் மாகாண அரசு விதித்துள்ள அதிரடி நிபந்தனை

மே 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?