இந்த வார இறுதியில் மொன்றியலில் உள்ள வெளியேறும் பிரதான பாலத்தில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்று, கியூபெக் மாகாணப் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
பிளாக் ஃபிரைடே விற்பனையால் மொன்றியல் மக்கள் கடைகளுக்கும், விடுமுறைக்காகப் பயணிக்கும் இடங்களுக்கும் செல்ல அதிக வாய்ப்பு உள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து பிரச்சினை நிகழும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மொன்றியலின் மேற்கு முனையையும் வோட்ரேய்-டோரியனையும் (Vaudreuil-Dorion) இணைக்கும் இல்-ஓ-டூர்ட் பாலம் (Île-aux-Tourtes Bridge), நெடுஞ்சாலை 40 மேற்கில் உள்ள தனது மூன்று பாதைகளில், இரண்டை மூடவுள்ளது.
இந்த முக்கியப் பாதைகளை மூடும் பணி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கி, திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கியூபெக் போக்குவரத்து அமைச்சகம் (Quebec Transport Ministry) தெரிவித்துள்ளது.
