பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் உயர்மட்ட அரசு அதிகாரத்துவ அமைப்பில் (Public Service) பாரிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
12 துணை அமைச்சர்களுக்கு (Deputy Ministers) புதிய துறைசார் மாற்றங்கள்வழங்கப்பட்டுள்ளதோடு, 8 சிரேஷ்ட அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இலக்குகளை விரைந்து எட்டவே இந்த மூலோபாய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் கார்னி தனது இலக்குகளுக்கு வலுசேர்க்கும் வகையில் முக்கிய
துறைகளில் நிபுணர்களை நியமித்துள்ளார்.
கனடிய மத்திய வங்கியின் முன்னாள் கொள்கை இயக்குநர் நிக் லெஸ்விக் (Nick Leswick), புதிய நிதித்துறை துணை அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் புதிய துணை அமைச்சராக கிறிஸ் பாக்ஸ் (Chris Fox) பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்த விசாரணையை முன்னெடுத்த நீதிபதி மேரி-ஜோஸ் ஹோக் (Marie-Josée Hogue), நீதித்துறையின் புதிய துணை அமைச்சராகவும், துணை அட்டர்னி ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார விவகாரங்களைக் கவனிப்பதற்காக ப்ரூக்கிங்ஸ்
நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் மெக்ஆர்தர், அமைச்சரவை செயலகத்தில்
இணைக்கப்பட்டுள்ளார்.
