மொன்றியல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் பணியாற்றிய சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் புதிய மதச்சார்பின்மை சட்டமான ‘மசோதா 94’ (Bill 94) நடைமுறைக்கு வந்துள்ள நிலையிலேயே, இந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதச் சின்னங்கள் தடைச் சட்டத்தை (Bill 21) விரிவுபடுத்தி, கடந்த ஆண்டு கியூபெக் அரசு ‘மசோதா 94’- எனப்படும் சட்டத்தை உருவாக்கியது. இந்தச் சட்டம் அமுலாக்கப்பட்டமை காரணமாக, மொன்றியல் அருகே உள்ள ‘Mille-Îles’ கல்வி மண்டலத்தில் மட்டும் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தாம் வகித்துவந்த பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
அத்துடன், லவால் பகுதியில் சுமார் 40 ஊழியர்கள் சம்பளம் இல்லாத விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.