கியூபெக் மாகாணத்தின் ‘சென்டர் வோர்லேஜ்’ (Centre Vorlage) பனிச்சறுக்குத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவலை ஒட்டாவா குழந்தைகள் மருத்துவமனை (CHEO) மூலம் அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
கடந்த 11-ஆம் திகதி, தனது பள்ளியூடாக கல்விச் சுற்றுலா சென்றிருந்த அச்சிறுமி, பனிச்சறுக்கு மலை உச்சியில் மின்தூக்கியிலிருந்து இருந்து இறங்க முயன்றார்.
அப்போது அவரது உடை எதிர்பாராதவிதமாக மின்தூக்கி இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது.
இறுதியில், மின்தூக்கியை மீண்டும் கீழ்நோக்கி நகர்த்தி, தரைப்பகுதிக்குக் கொண்டு வந்த பின்னரே அவரை மீட்க முடிந்தது.
அதன் பிறகு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அந்த சிறுமி உயிரிழந்துள்ளமை தற்போது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
