பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் நினைவாக, ஜாம்பியா (Zambia) நாட்டிலும் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த 12 வயது சிறுவன் ஏபெல் வான்சா (Abel Mwansa Jr.) சிறிது காலத்தின் முன்னர், ஜாம்பியாவின் சோல்வேசி நகரில் வசித்து வந்தவர்.
அங்குள்ள ‘சிட்டி ஆஃப் கிரேஸ்’ தேவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
உயிரிழந்த சிறுவனான ஏபெல், அந்நிகழ்வில், ஒரு “சிறிய தேவதை” எனப் புகழப்பட்டார்.
அவரது சிரிப்பும், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் குணமும் அனைவரையும் நெகிழச் செய்ததாக பாஸ்டர் கிறிஸ்டோபர் பிவால்யா தெரிவித்தார்.
தற்போது கனடாவில் வசிக்கும் ஏபெல்லின் தந்தை, தனது மகனின் உடலை சொந்த மண்ணான ஜாம்பியாவிலேயே அடக்கம் செய்ய விரும்புவதாகவும், விரைவில் அங்கு வந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
