டொராண்டோ மாநகராட்சி தனது 2026-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், சொத்து வரியை (Property Tax) வெறும் 2.2 சதவீதம் மட்டுமே உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
டொராண்டோ மேயராக, ஒலிவியா சௌ பதவியேற்ற பிறகு அறிவிக்கப்பட்டுள்ள மிகக் குறைந்த வரி உயர்வு இதுவாகும்.
இவ்வாண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் வாழ்வாதாரச் செலவுகளைக் குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டொராண்டோ நகரில் 3 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகளுக்கு ‘லக்ஸரி ஹோம் டேக்ஸ்’ (Luxury Home Tax) விதிக்கப்படுவதால், சாதாரண நடுத்தர வர்க்கத்தினரின் வரிச் சுமை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


