ஒட்டாவாவில் உள்ள இரண்டு தேவாலயங்களுக்கு விரைவில் சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம் என்பது, கிறிஸ்தவ மதகுருமாரிடையே கவலைக்குரிய செய்தியாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து, ஒட்டாவா-கார்ன்வால் பேராயர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ஒரு நல்ல விஷயமாக இருப்பதை விட, தேவையற்ற விதிமுறைகளையும் செலவுகளையும் கொண்டு வந்து அதிக சிக்கல்களை உருவாக்கும் என்று தேவாலயத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
நகரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்று, ஹின்டன்பர்க்கில் உள்ள செயிண்ட்-பிரான்சுவா-டி’அசிஸ் (Saint-François-d’Assise) மற்றும் ஆர்லியன்ஸில் உள்ள செயிண்ட்-ஜோசப் டி’ஆர்லியன்ஸ் (Saint-Joseph d’Orléans) தேவாலயங்களுக்குப் பாரம்பரிய பாதுகாப்பை வழங்கப் பரிந்துரைத்தது.
அதனையடுத்தே கிறிஸ்தவ மதகுருமார் அதுகுறித்த தங்களுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒன்டாரியோவில் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற கட்டிடங்கள் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படுகின்றன.
அவற்றின் கலாசார மதிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், அவற்றை எளிதாக இடிக்கவோ அல்லது மாற்றவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
