லவால் (Laval) பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில், சுமார் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லூயிஸ்-பிஸன் பாலத்திற்கு (Louis-Bisson Bridge) அருகில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக, ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.
அதனையடுத்து பின்னால் வந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.
திங்கட்கிழமை காலை நிகழ்ந்த இந்தச் சங்கிலித் தொடர் விபத்தினால் ”நெடுஞ்சாலை 13” (Highway 13 South) பல மணிநேரம் முடக்கப்பட்டது. பனிப்பொழிவு மற்றும் வழுக்கும் தன்மையுடைய வீதிகளே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


