கணேமுல்ல சஞ்சீவ என்பவரைப் படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்பவரை முக அடையாளப் பரிசோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த அனுமதிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாத நிலையில், அவருக்கு எதிராக இவ்வாறான கட்டளைகளைப் பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என கூறி நீதவான் இக்கோரிக்கையை நிராகரித்தார்.


