மொன்ட்ரியல் நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா, தான் பதவியேற்றவுடன் மேற்கொள்ளும் முதல் பணி குறித்து அறிவித்துள்ளார்.
நகரத்தின் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகளை கடுமையாகப் பாதித்துள்ள தற்போதைய போக்குவரத்து வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதே தனது முதல் பணி என்று அவர் உறுதியளித்துள்ளார்.
நகராட்சித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய இந்தத் போக்குவரத்து வேலைநிறுத்தம், மொன்ட்ரியால் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
முக்கிய பேருந்து வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சேவைகளுடன் இயங்குகின்றன.
இந்த வேலைநிறுத்தம் ஆனது மொன்ட்ரியால் போக்குவரத்து நிறுவனம் (STM) மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்திற்கு இடையேயான பிரச்சினைகளாலேயே, முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு உரையாற்றிய மார்ட்டினெஸ் ஃபெரடா, மொன்ட்ரியல் நகரின் இயக்கத்தை மீட்டெடுப்பதே மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார்.


