ஸ்கார்பரோவில் உள்ள ஒரு குடும்பத்தின் பத்து ஆண்டுகாலப் பாரம்பரியமான பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பானது, முகமூடி அணிந்த மர்ம நபர்களால் தாக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
முன் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த பல கிறிஸ்துமஸ் பொம்மைகள் கிழிக்கப்பட்டதால், குடும்பத்தினர் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த குடும்பம் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் அலங்காரப் பணிகளை முடித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ரொறொன்ரோ காவல்துறை (TPS) இந்த அழிவுச் செயல் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.


