பொதுமக்களின் அந்தரங்கத் தரவுகள் மற்றும் இணையப் பரிமாற்றங்களை பொலிஸாரும் உளவுத்துறையும் எளிதாகக் கண்காணிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய ‘பில் C-22’ சட்டமூலத்தில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு, லிபரல் கட்சியின் மத்திய அரசு இணங்கியுள்ளது.
இந்தச் சட்டமானது ஒட்டுமொத்த இணையவழிப் பாதுகாப்பிற்கே (Cybersecurity) அச்சுறுத்தலாக மாறும் எனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்தே, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
குற்றவியல் மற்றும் உளவுத்துறை விசாரணைகளின் போது, சந்தேகத்திற்குரியவர்களின் டிஜிட்டல் தரவுகள் மற்றும் தொலைத்தொடர்புகளைப் பொலிஸார் விரைவாகக் விசாரணை செய்வதற்கு வழிவகை செய்யும் நோக்கிலேயே, இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் இச்சட்டம் ஆனது, இணையத்தள ஊருவிகளுக்கே உதவியாக மாறும் என ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன.
இதன் எதிரொலியாக, குறியாக்கப் பாதுகாப்பு மற்றும் தரவு சேமிப்பு விதிகளைத் தெளிவுபடுத்தும் புதிய திருத்தங்களை, இந்தச் சட்டத்தில் இணைக்கவுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
