மத்திய அரசுப் பொலிஸ் படையான ‘ரோயல் கனேடியன் மவுண்டெட் பொலிஸ்’ (RCMP) அமைப்பின் முன்னணிப் புலனாய்வு அதிகாரி ஒருவரை, பதவியிலிருந்து நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனது வழக்குகளுக்கு ரகசியத் தகவல் வழங்கும் நபர் ஒருவருடன் அந்தப் புலனாய்வு அதிகாரி இரகசிய உடலுறவு மற்றும் தகாத உறவு (Intimate relationship) வைத்திருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த முறையற்ற உறவு காரணமாக ஒட்டுமொத்தக் குற்றவியல் விசாரணையின் நேர்மைத் தன்மையும், பொதுமக்களுக்குப் பொலிஸ் துறை மீதான நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள. கனேடிய ஒழுக்காற்று வாரியம் அவரை பதவியை விட்டு நீக்குமாறு கூறியுள்ளது.
கனேடியப் பாதுகாப்புத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ‘கோப்ரல் எக்ஸ்’ (Corporal X) என ஆவணங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் ஒரு முக்கியக் குற்றவியல் வழக்கில் முன்னணிப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியபோது, தனது ரகசியத் தகவல் வழங்குநருடன் (Confidential informant) கொள்கை நெறிமுறைகளை மீறி நெருக்கமான உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
தனது முறையற்ற உறவை மறைத்ததன் மூலம், கோப்ரல் எக்ஸ் என்றழைக்கப்படும் அந்த அதிகாரி, தனது சக அதிகாரியை மட்டுமன்றி, நேரடியாக நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி ஏமாற்றியுள்ளார் (Misled the court) என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
