வின்னிபெக் (Winnipeg) நகரில் அமைந்துள்ள ‘கனடா மனித உரிமைகள் அருங்காட்சியகத்தின்’ (CMHR) ஒரே ஒரு யூத சமூகப் பிரதிநிதியும், சர்வதேச மனித உரிமைச் சட்டப் பேராசிரியருமான மார்க் பெர்லின் (Mark Berlin) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அங்கு வரவிருக்கும் பலஸ்தீன இடப்பெயர்வு குறித்த வரலாற்றுப் பொருட்காட்சியானது, நடுநிலையின்றி, ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கனடா மனித உரிமைகள் அருங்காட்சியகத்தில், எதிர்வரும் சனிக்கிழமை அன்று “Palestine Uprooted: Nakba Past and Present” என்ற புதிய வரலாற்றுப் பொருட்காட்சி திறக்கப்படவுள்ளது.
1948 ஆம் ஆண்டு அரபு – இஸ்ரேல் போரின்போது, சுமார் 750,000 பலஸ்தீன மக்கள் தங்களின் பூர்வீக நிலங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ‘நக்பா’ வரலாற்றுத் துயரத்தை மையமாகக் கொண்டு இந்தப் பொருட்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் இந்த அருங்காட்சியகத்தின் அறங்காவலர் குழு (Board of Trustees) உறுப்பினராகப் பணியாற்றி வரும் மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் பெர்லின், இக்காட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் மார்க் பெர்லின் தனது இராஜினாமா கடிதத்தைக் கனடாவின் மத்திய பாரம்பரியத் துறை அமைச்சர் மார்க் மில்லருக்கும் (Marc Miller), அருங்காட்சியகத்தின் தலைவருக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


