ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இறுதி மதிப்பெண்களுடன் அவர்களின் வகுப்பறை வருகைப்பதிவு மற்றும் பங்கேற்பைக் கட்டாயமாக இணைப்பதற்கான புதிய சட்ட வரைவை, ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், வகுப்பறை ஈடுபாட்டை அதிகரிக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஒன்ராறியோ கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோ கல்வி அமைச்சர் பால் காலாண்ட்ரா (Paul Calandra) தாக்கல் செய்த புதிய மாகாண கல்விச் சட்டத்தின் கீழ், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இறுதி மதிப்பெண்ணில் கணிசமான ஒரு பகுதி ஆனது, அவர்களின் வருகைப்பதிவு (Attendance) மற்றும் வகுப்பறை பங்கேற்பிற்கு (Participation) ஒதுக்கப்படவுள்ளது.
அத்துடன், முக்கியப் பாடங்களுக்கு, இறுதிக்கட்ட எழுத்துபூர்வ பரீட்சைகளில் (Written Exams) குறைந்தபட்சம் 20 சதவீத மதிப்பெண் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
கணிதம் (Math), ஆங்கிலம் (English) மற்றும் அறிவியல் (Science) உள்ளிட்ட முக்கியப் பாடங்களின் இறுதிக்கட்ட மதிப்பெண்ணில் குறைந்தபட்சம் 20 சதவீதம் எழுத்துபூர்வ பரீட்சைகளின் (Written Exams) அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என புதிய சட்டம் கட்டாயமாக்குகிறது.


