பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பீச்லாந்து (Peachland) நகருக்கு அருகே பற்றிய புதிய காட்டுத் தீ, தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பீச்லாந்திற்கு தென்மேற்கே சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முன்றோ ஏரிக்கு (Munro Lake) அருகே பற்றிய இந்தத் தீ தற்போது 0.7 சதுர கிலோமீட்டர் (74.3 ஹெக்டேர்) பரப்பளவிற்கு பரவியுள்ளது.
அப்பகுதியில் வீசும் பலத்த காற்றின் காரணமாகவே இந்த காட்டுத்தீ அதிதீவிரமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 325 முகவரிகளைச் சேர்ந்த மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
