மொண்ட்ரியலுக்கு வடமேற்கே மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.
லாரன்ஷியன்ஸ் பிராந்தியத்தில், உள்ள மிராபெல் அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலை 50-இல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கியூபெக் மாகாணக் காவல்துறை அளித்த தகவலின்படி, புதன்கிழமை அதிகாலை 5:30 மணிக்குச் சற்று முன்னதாக இந்த விபத்து நிகழ்ந்தது.
இரண்டு இலகுரக வாகனங்கள் மற்றும் ஒரு கனரக டிரக் வாகனம் உட்பட மொத்தம் மூன்று வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
சிறிய வாகனத்தை செலுத்திய சுமார் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
விபத்து நடந்த நேரத்தில் வானிலை மற்றும் சாலை நிலைமைகள் மிகவும் சவாலாக இருந்தன என்றும், விபத்துக்குப் பனிப்பொழிவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும், காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


