19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி இலங்கை அணி ஐக்கிய அமீரகத்திற்கு பயணிக்கவுள்ளதுடன் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் குகதாஸ் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரியின் விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குழு B இல் இலங்கை,நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளதுடன், முதல் போட்டி எதிர்வரும் 13ம் திகதி நேபாள அணிக்கு எதிராக விளையாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


