ஐ.நா. அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இந்தியா, வியட்நாம் படையினருக்கான கூட்டுப் பயிற்சி ஹனோய் நகரில் நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளதும் படைவீரர்கள் பங்குபற்றிய இக்கூட்டு பயிற்சி வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரிலுள்ள மியூ மோன் பயிற்சி மையத்தில் மூன்று வார காலம் நடைபெற்று நிறைவுற்றுள்ளது.
இப்பயிற்சியில் இரு தரப்பில் இருந்தும் பொறியியலாளர்கள், மருத்துவர்கள், அமைதி காக்கும் படை வீரர்கள் மற்றும் இராணுவ பார்வையாளர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதாக வியட்நாம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான துறையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஃபாம் மான் தாங் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சியின் ஊடாக உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஐ.நா. ஆணையை நிலைநிறுத்துவதில் இந்தியா மற்றும் வியட்நாமின் பகிரப்பட்ட பார்வையும் அர்ப்பணிப்பும் வௌிப்படுத்தப்பட்டுள்ளது

