முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோவின் கோவாலிஷன் அவெனிர் கியூபெக் (CAQ) அரசாங்கம், மாகாணத்தில் உள்ள பொது நிறுவனங்களில் மத நடைமுறைகளையும் அடையாளங்களையும் மேலும் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஒரு புதிய சட்டமூலத்தை இன்று சமர்ப்பிக்கின்றது.
‘லாஇசிட்டே’ (laïcité) என்று பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படும் அரச மதச்சார்பின்மையை வலியுறுத்தும் இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டின் சர்ச்சைக்குரிய சட்டமூலம் 21-ஐ விடவும் விரிவான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டமூலம், மதச் சிறுபான்மையினரைக் குறிவைக்கிறது என்றும், அடிப்படைச் சுதந்திரங்களை மீறுகிறது என்றும் மதக் குழுக்களும் சிவில் உரிமைகள் ஆர்வலர்களும் இப்போதே கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இதனை அமுலாக்குவதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் CEGEP போன்ற பொது நிறுவனங்களில் பிரார்த்தனை அறைகளுக்குத் தடை விதிக்கப்படலாம்.
மேலும், பொது இடங்களில் பிரார்த்தனை செய்வதற்கும் சில விதிவிலக்குகளுடன் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கல்வித்துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் மத அடையாளங்கள் அணிவதற்கான தடையை நீட்டிக்க இந்தச் சட்டம் முயற்சிக்கிறது.
அரசு மானியம் பெறும் பகலிரவுப் பராமரிப்பு மையங்கள் (Daycares), ஒரு மத மரபைப் பிரத்தியேகமாகக் கொண்ட உணவுகளை வழங்குவதை இந்தச் சட்டம் தடை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


