Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் ஆரம்பம்

நவம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது வருகிறது.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் பல்வேறு துயிலும் இல்லங்கள் மற்றும் தமிழர் தாயக பகுதியில் பல்வேறு இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது

அந்த வகையிலே இன்று (21) காலை தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தினுடைய ஆரம்ப நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

நான்கு மாவீரர்களை இந்த மண்ணுக்காக கொடுத்த பெற்றோர் ஒருவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது

இந்த நிகழ்வில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணி குழு நிர்வாகத்தினர் மாவீரர்களின் பெற்றோர் மாவீரர்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்

இம்முறையும் வழமை போன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெறும் எனவும் அனைத்து பெற்றோர்களையும் வருகை தந்து இந்த மாவீரர் நாளிலே கலந்து கொள்ளுமாறு பணி குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் – 40 வருட கடூழிய சிறைத்தண்டனை
அடுத்த செய்தி யாழில் நபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிணையில் விடுவிப்பு!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து!

ஜூலை 24, 2025
இலங்கை

யாழில் பைபிள் விவகாரத்திற்கு தீர்வு

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?