பிரதமர் மார்க் கார்னியை சீனாவுக்கு வருகை தருமாறு சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங், உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கார்னி, இது இரு நாடுகளின் உறவில் ஒரு திருப்புமுனை என்று அறிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் கனடாவில் ஒரு சீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாகியை கனேடிய அரசாங்கம் கைது செய்ததை அடுத்து, அதற்குப் பதிலடியாக இரண்டு கனேடியர்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்களால், ஒட்டாவாவுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் மோசமான நிலையை அடைந்திருந்தன.
இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில், இரு நாட்டுத் தலைவர்களும் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சீன – கனேடிய நாடுகளின் உறவுகளை "நடைமுறை மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் புதுப்பிக்க இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
இதன்போதே, சீன ஜனாதிபதியால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. சீனாவின் அழைப்பை பிரதமர் கார்னி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர் மேற்கொள்ளவுள்ள விஜயமானது 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கனேடியப் பிரதமர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயமாக அமையவுள்ளது.
