நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட குழு என, தமது அமைச்சரவையை பிரதமர் மார்க் கார்னி வர்ணித்துள்ளார்.
தனது புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தி உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அமைச்சரவையானது முக்கியமான தருணத்துக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடா தற்போது எதிர்கொள்ளும் பலவிதமான சவால்களைச் சமாளிப்பதற்காக, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளும் புதியவர்களும் கலந்த வகையில், இந்த அமைச்சரவை வடிவமைக்கப் பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரமின்மை, வீட்டுவசதிப் பற்றாக்குறை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான சாத்தியமான பிரச்சினைகள் ஆகியவை இந்த அமைச்சரவை எதிர்கொள்ளவுள்ள சவால்களுள் சிலவாகும்.
29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையில், பதினான்கு பேர் முற்றிலும் புதியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்த இருந்த 14 பேர், மீண்டும் புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் அனைவருக்கும் புதிய துறைகள் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.
