கியூபெக் மாகாணத்திலுள்ள சிறைச்சாலையிலிருந்து அண்மையில் தப்பியோடிய கொலையாளியான லோரி பில் ஜெர்மா (Lory Bill Germa), ஒன்ராறியோ மாகாணத்தின் தென் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை ஒன்ராறியோ மாகாண காவல்துறை வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
69 வயதான லோரி பில் ஜெர்மா, சனிக்கிழமை இரவு கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் (Laurentians) பகுதியிலுள்ள ஆர்க்கம்போல்ட் சிறையின் குறைந்தபட்ச பாதுகாப்புப் பிரிவில் (minimum-security unit) கைதிகள் கணக்கெடுப்பின் போது காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டது.
கனடாவின் சீர்திருத்த சேவை (Correctional Service Canada) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
