சஸ்காட்செவன் மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பேரழிவுக்குள்ளான வடக்குப் பகுதிகளின் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்ப 20 மில்லியன் டொலர் நிதியை சஸ்காட்செவன் அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தக் காட்டுத்தீயினால் கிட்டத்தட்ட 300 முக்கிய வீடுகளும், 2,000க்கும் மேற்பட்ட தனிப்பட்ட சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.
மீட்புப் பணிகளை வழிநடத்த ஒரு சிறப்பு மீட்புப் பணிக் குழு (Recovery Task Team – RTT) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அரசாங்க உறவுகள், சமூக சேவைகள், சுற்றுச்சூழல் மற்றும் அரச நிறுவனங்களின் அமைச்சுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
காட்டுத்தீ குறித்த புதுப்பிப்பு அறிக்கையின் போது சஸ்காட்செவன் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிம் மெக்லியோட் (Tim McLeod) இதுபற்றிப் பேசுகையில், “இந்த ஆண்டு காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான மீட்புப் பணிகளுக்கு உதவுவது எங்கள் அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமையாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
20 மில்லியன் டொலர் நிதியின் பெரும்பகுதி மாகாண பேரிடர் உதவித் திட்டம் (Provincial Disaster Assistance Program – PDAP) மூலம் வழங்கப்படும்.
