உலகில் பல நாடுகளில் இயறகை அனர்த்தத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று அதிகாலை நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இவ்வதிர்வானது 5.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த அதிர்வால் எட்டு குடியிருப்புக்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதுடன் சுமார் 100 இற்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் இதனை அறிவித்துள்ளது.
