Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் மின்சாரப் பேருந்துகளின் சேவையை இடைநிறுத்த திட்டம்

செப்டம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் 1,200 மின்சாரப் பேருந்துகளின் சேவையை இடைநிறுத்துவதாக மாகாண கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அண்மையில் பள்ளிக்கு மாணவர்களைக் கொண்டுசெல்லும் மின்சாரப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் நடவடிக்கையால் இன்று மாகாணம் முழுவதும் பள்ளிப் பேருந்து சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வார ஆரம்பத்தில் மொன்ட்ரியல் நகரில், ‘லயன் எலக்ட்ரிக்’ (LION Electric) நிறுவனத்தின் மின்சாரப் பள்ளிப் பேருந்து ஒன்று நகர்ந்து கொண்டிருந்த போது, திடீரென தீப்பிடித்தது.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு, பேருந்தில் இருந்த ஐந்து குழந்தைகளையும் ஓட்டுநர் உடனடியாக வெளியேற்றி, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

இந்த விபத்து, வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கல்வி அமைச்சகம் சந்தேகித்துள்ளது.

இது குறித்து விரிவான விசாரணை நடத்த கனடா போக்குவரத்துத் துறை (Transport Canada) ஒரு குழுவை அமைத்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பே தங்களின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ள கியூபெக் மாகாண கல்வி அமைச்சர் சோனியா லெபெல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஜோனதன் ஜூலியன் ஆகியோர் இணைந்து நேற்று மாலை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “இந்த தீ விபத்துக்குப் பிறகு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,200 பேருந்துகளின் சேவையை உடனடியாக நிறுத்துமாறு பள்ளி சேவை மையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து சேவை நிறுத்தத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளிச் சேவை மையங்களை கல்வி அமைச்சகம் கோரியுள்ளது.

முந்தைய செய்தி சார்லி கிர்க்கின் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி ஈஸ்ட்வே டேங்க் நிறுவனத்தின் உரிமையாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலுக்கு வடமேற்கே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டிசம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை சாடிய அமெரிக்க துணை ஜனாதிபதி

நவம்பர் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

நவம்பர் 20, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Arthabaska இடைத்தேர்தலில் Parti Québécois கட்சி வெற்றி பெற்றது

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?