மேற்கு கியூபெக் பகுதியில் பணியாற்றி வந்த 33 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கியூபெக் மாகாண அரசின் சர்ச்சைக்கரிய Bill 2 சட்டத்தால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, இந்த பதவி விலகல் நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இதனால் சுமார் 15,000 மக்கள் தங்களது குடும்ப மருத்துவரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பதவி விலகிய மருத்துவர்களில், புற்றுநோய் சிகிச்சை (Oncology), மயக்க மருந்து (Anesthesiology) மற்றும் கதிரியக்கவியல் (Radiology) உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த 9 நிபுணத்துவ மருத்துவர்களும் உள்ளடங்குவர்.
வெளியேறிய இந்த மருத்துவர்கள் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியவர்கள் என்பதால், அவர்களுக்குப் பதில் புதிய மருத்துவர்களை நியமிப்பது கடினமானது என மருத்துவ அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
