மொன்றியல் தெற்கு கடற்கரையில் உள்ள லாங்குவேய் நகரில் பேருந்து நிலையம் ஒன்றில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் தாய் இந்த பெண்ணா என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் மீது சிசுக்கொலை (Infanticide) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் லாங்குவேய் காவல்துறையின் (SPAL) செய்தித் தொடர்பாளர் ஜாக்குலின் பியர் தெரிவித்துள்ளார்.
லாங்குவேய் நகரில் ஒரு மாத காலத்திற்குள் ஒரு பச்சிளம் குழந்தை கைவிடப்படுவது இது இரண்டாவது தடவை ஆகும்.
எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்று காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்
