Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கின் மொழிக்கொள்கை தொடர்பில் செனட் குழு எச்சரிக்கை

மார்ச் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் வாழும் ஆங்கிலம் பேசும் மக்கள், தங்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளைத் தாய்மொழியில் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக, நாட்டின் செனட் சபை (Senate) எச்சரித்துள்ளது.

ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவர் இருமொழிப் புலமையுடன் (Bilingual) இருக்க முடியாது என்ற கருத்தை முன்வைத்துள்ள செனட் குழு, மொழித் தடையால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

செனட் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளுக்கான குழு சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில், அவசர சிகிச்சையின் போதும் அல்லது முதுமை மறதி (Dementia) போன்ற நோய்களின் போதும், மக்கள் தங்களுக்குத் தெரிந்த இரண்டாவது மொழியில் பேசுவது கடினம் எனக் கூறப்பட்டுள்ளது.

இக்கட்டான சூழலில் இருப்பவர்களிடம் பிரெஞ்சு மொழியில் மட்டுமே பேச வேண்டும் என எதிர்பார்ப்பது முறையான சிகிச்சைக்குத் தடையாக அமையும் என செனட்டர் அலிஸ்டர் சுரேட் (Senator Allister Surette) சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் மொழிச் சட்டங்கள் காரணமாக, மருத்துவத் துறையில் ஆங்கிலம் பேசும் ஊழியர்களைப் பணியமர்த்துவதில் கடும் சிக்கல்கள் நிலவுகின்றன.

குறிப்பாக காஸ்பே (Gaspé) போன்ற கிராமப்புறப் பகுதிகளில் 10% மக்கள் ஆங்கிலம் பேசினாலும், அங்கு அவர்களுக்குச் சேவையளிக்க ஒரு இருமொழி மருத்துவமனை கூட இல்லை. இதனால் முதியவர்கள் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணம் செய்து மொன்றியலுக்கு வரவேண்டிய அவலம் நீடிக்கிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிப்பது தொடர்பில், செனட் குழு 14 முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. சுகாதாரம் என்பது மாகாண அரசின் பொறுப்பாக இருந்தாலும்,
அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான சிகிச்சை அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என செனட் சபை வலியுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் பனிமழை உக்கிரம்
அடுத்த செய்தி மாகாணப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் எரிபொருள் விலையைக் குறைப்போம் – பார்ட்டி கியூபெக்வா கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்

ஏப்ரல் 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஐ.எஸ்.ஐ.எல் போராளியுடன் கியூபெக் பெண் திருமணம்!

ஜூலை 23, 2025
கியூபெக்

கியூபெக்கில் சூறாவளி பாதிப்பு – 1,500 ஊழியர்கள் களத்தில் அர்ப்பணிப்பு

மார்ச் 19, 2026
கியூபெக்

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மொன்றியல் மாநகரசபை ஊழியர்கள்

மார்ச் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?