நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஒரு வனப்பகுதிக்குள் நுழைவதற்கான தடையை வேண்டுமென்றே மீறியதற்காக, நபர் ஒருவருக்கு 28,000 டொலருக்கு அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயைத் தடுக்கும் பொருட்டு, நோவா ஸ்கோஷியா மாகாண அரசு வனப்பகுதிக்குள் செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது.
அக்டோபர் 15ஆம் திகதி வரை அல்லது நிலைமை சீரடையும் வரை, இந்த தடை உத்தரவு, இயங்குநிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தடையை மீறுபவர்களுக்கு 25,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜெஃப் எவெலி என்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர், இந்த தடையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், வனத்துறை அலுவலகம் அருகே, தான் வேண்டுமென்றே வனப்பகுதிக்குள் நுழைவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அவர் ஒளி-ஒலிப்பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
பின்னர் அவர் வனப்பகுதிக்குள் நடந்து சென்று திரும்பி வந்த பிறகு, அவருக்கு மாகாண அரசால் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
